ராஜிதவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

197 0

அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த தலைமையிலான குழுவினால் இந்த முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் துக்க தினம் அறிவிப்புச் செய்தமை நியாயமானது என அமைச்சரவைத் தீர்மானம் அறிவிக்கும் கடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அக்குழு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.

இந்த துக்க தின பிரேரணையை முன்வைத்த வட மாகாண சபை அமைச்சர் கந்தையா சர்வேஷ்வரனுக்கு எதிராகவும் இதேபோன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அம்முறைப்பாட்டில், அவர் அரசியலமைப்பை மீறியுள்ளதாக  குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.

Leave a comment