அரசிலிருந்து வெளியேறும் நாளை தீர்மானியுங்கள் – ஜனாதிபதி

338 0

தற்போதைய அரசாங்கத்திலிருக்கும் 23 அமைச்சர்களும் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கான நாளொன்றை தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சியின் புதிய சீர்திருத்தத்தின் கீழ் எதிர்வரும் ஜூன் 3ம் திகதி புதிய அதிகாரிகள் சபை தெரிவு செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment