எரிபொருள் விலைச் சூத்திரத்தை மதிப்பிட சர்தேச நாணய நிதியம் தீர்மானம்

1378 0

இலங்கையின் எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானிப்பதற்கான அறிமுகப்படுத்தப்படவுள்ள விலைச் சூத்திரத்தை, சர்தேச நாணய நிதியம், மதிப்பிடத் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் நிதி அபாயங்களைக் குறைப்பதற்காகவே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அந்த நிதியம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் எரிபொருள் நிவாரணத்தால், ஏழை மக்களன்றி, பணக்காரர்களே பயன்பெற்றனரென்றும், நிதியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள விலைச் சூத்திரமானது, இலங்கையின் பொருளாதாரத்துக்கு, பாரிய நன்மைகளைக் கொண்டுவரவுள்ளதென்றும், அந்நிதியம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment