ஜூன் 3 ஆம் திகதி ஸ்ரீ ல.சு.கட்சிக்கு தற்காலிக நிருவாகக் குழு- டிலான் பெரேரா

5081 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிருவாக சபைக்குப் பதிலாக எதிர்வரும் 3 ஆம் திகதி தற்காலிக நிருவாக சபையொன்றை நியமிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

நேற்றிரவு (17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய போது இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. இக்கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் ஸ்ரீ ல.சு.க.யின் ஊடகப் பேச்சாளர் டிலான் பேரேரா இதனைக் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் 3 ஆம் திகதி கட்சியின் நிறைவேற்றுக் குழு கூடி, இந்த தற்காலிக நிருவாகக் குழுவை நியமிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்காலிக நிருவாக சபை நியமிக்கப்பட்டதன் பின்னர் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதிக்கு முன்னர் கட்சியின் பொறுப்புக்கள் மறுசீரமைக்கப்படும் எனவும் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ ல.சு.க.யின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவும், பொதுஜன ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவும் தமது கட்சிப் பொறுப்புக்களிலிருந்து விலக வேண்டும் என அரசாங்கத்திலிருந்து வெளியோறிய 16 பேரும் கட்சியின் தலைமைக்கு அழுத்தம் பிரயோகித்து வருகின்றனர். இந்த வகையிலேயே கட்சியின் பொறுப்புக்கள் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்துக்கள் கட்சிக்குள் இடம்பெற்று வருகின்றன.

Leave a comment