வைத்தியர்கள் போராட்டம் காலை 8 மணியுடன் நிறைவு

261 0

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (17) ஆரம்பித்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று (18) காலை 8.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று காலை 08.00 மணி முதல் ஆரம்பித்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை 08.00 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இது ஓர் ஆரம்பம் எனவும் தமது கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காது போனால், தொடர் வேலைநிறுத்தம் ஒன்றை முன்னெடுக்கப் போவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment