யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நோக்கிய மோட்டார் சைக்கிள் பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்று (18) காலை ஆரம்பமானது.
பேரணி ஏ-9 வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து முள்ளிவாய்க்காலைச் சென்றடையவுள்ளது.
“வலிசுமந்த முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி மாபெரும் மோட்டார் சைக்கிள் பேரணி” என்ற தொனிப்பொருளில் மாணவர்கள் இந்த மோட்டார் சைக்கிள் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

