தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது

245 0

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14,625 மில்லிகிராம் கசிப்புடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக தலவாக்கலை விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

தலவாக்கலை விஷேட அதிரடிபடையினரால் இன்று (17) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டதாக விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

பதுளை – கொழும்பு இரவு நேர புகையிரத்தில் பை ஒன்றில் மறைத்து வைத்தவாறு கொண்டு வரப்பட்ட கசிப்பினை தலவாக்கலை, ஹோலிருட் தோட்டபகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபரை தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், இன்று (17) நுவரெலிய நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment