இ.போ.ச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

226 0

இலங்கைப் போக்குவரத்து சபையில் பணியாற்றும், சாரதிகள், பஸ் நடத்துனர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்களின் விடுமுறைகள் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து, அரசாங்கம் பஸ் கட்டணங்களில் 6.5 சதவீத அதிகரிப்பு செய்திருக்கின்றபோதிலும், அதில் தமக்கு உடன்பாடில்லை என தெரிவித்து தனியார் பஸ் சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் நாடுமுழுவதிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்தே இலங்கை போக்குவரத்து சபை இவ்வாறு அறிவித்தல் விடுத்துள்ளது.

Leave a comment