பிரித்தானியாவின் பிரிவு சிறீலங்காவுக்கு பாதிப்பு

4674 0

harsha-d-silvaஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக உள்ள நிலையில் அந்த நாட்டுடன் புதிய பொருளாதார உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படும் என சிறீலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரியும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தினால் கிடைக்கும் ஜிஎஸ்பி வரிச்சலுகையால் சிறீலங்காவுக்குக் கிடைக்கும் 40 வீதமான வரிச்சலுகை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதனால் கூடிய விரைவில் பிரித்தானியாவுடன் வர்த்தக உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்படும். இதன் வரைவு குறித்து சிறிலங்கா பிரதமர் நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்துவார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக பிரித்தானியா மக்கள் எடுத்த முடிவினால் ஏற்படும் உலகப்பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் சிறீலங்காவையும் பாதிக்கும் எனவும் தெரிவித்தார்.

Leave a comment