400 பேருக்கு நாளை இரட்டை பிரஜாவுரிமை கடவுச்சீட்டு

333 0

வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 400 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கடவுச் சீட்டு வழங்கும் நிகழ்வு நாளை (16) பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்னவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என். ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 03 ஆண்டுகளில் வௌிநாடுகளில் உள்ள சுமார் 32,000 இலங்கையர்கள் இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment