அரச ஊடக நிறுவனங்கள் மூன்றின் தலைமைப் பதவி பெண்கள் மூவரிடம்

253 0

அரச ஊடக நிறுவனங்கள் மூன்றிற்கு புதிய தலைவர்களை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு நியமித்துள்ளது.

இதன்படி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக பிரபல திரைப்பட இயக்குனர் இநோகா சத்தியாங்கனியும், சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கான புதிய தலைவராக நிதி அமைச்சின் மேலதிக செயலாளர் திலகா ஜயசுந்தரவும், சலசினே நிறுவனத்தின் புதிய தலைவராக உமா ராஜமந்திரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரச ஊடக நிறுவனங்கள் மூன்றின், தலைமைப் பதவிக்கு பெண்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளமை ஒரு முக்கிய அம்சமாகும்.

Leave a comment