நஜிப் ரசாக் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை

231 0

மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் மகாதிர் முகம்மது உத்தரவிட்டுள்ளார். 

மலேசியாவின் புதிய பிரதமராக 92 வயதான மகாதிர் முகம்மது பதவியேற்றுள்ளார். அவர் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதற்காக புதிய ஊழல் தடுப்பு ஏஜென்சி தலைவர் நியமனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மகாதிர் முகம்மது, அனைத்து அமைச்சகங்களில் உள்ள ஆவணங்களையும், வெளியே எடுத்துச் செல்ல மற்றும் அழிக்கக்கூடாது.

முன்னாள் பிரதமர் நஜிப் ராசாக் ஆட்சியில் இருந்த போது மலேசிய ஊழல் தடுப்புக்குழுவின் முன்னாள் தலைவர் அப்துல் ரசாக் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க விடாமல் தடுத்ததாக புகார் எழுந்தது. அப்துல் நசாக் அரசு பணம் 4.5 மில்லியன் டாலர் ஊழல் செய்ததாக் கூறப்பட்டது. அவர் மீது பல புகார்கள் செய்யப்பட்டன. இந்நிலையில், அவர் ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்.என மகாதிர் முகம்மது கூறினார்.

கடந்த வாரம் நஜிப் மற்றும் அவரது மனைவி வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல இருப்பதால், அவர் பயணம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என மகாதிர் முகம்மது கூறினார்.

Leave a comment