காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பான அலுவலகம், மரண சான்றிதழ் வழங்கும் காரியாலயமாக அமைந்து விடகூடாது!

259 0

காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பான அலுவலகம், மரண சான்றிதழ் வழங்கும் காரியாலயமாக அமைந்து விடகூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் குறித்து  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை விசாரணையில் இருந்து தப்புவதற்கான முயற்சிகளில் ஒன்றே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a comment