பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழு முறைப்பாடு

213 0

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவுகளை பொலிஸ் மா அதிபர் பின்பற்றாது புறக்கணித்து வருகின்றமை தொடர்பில் ஜனாதிபதிக்கும், அரசியலமைப்புச் சபைக்கும் முறைப்பாடு செய்ய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட பணிப்புரைகள் பல பொலிஸ் திணைக்களத்தினால் செயற்படுத்தப்பட வில்லையெனவும் குற்றம்சாட்டப்படுகின்றது.

இதனால், தமது பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாத ஒரு நிலைமை தோற்றம் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நியமனம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் தேசிய பொலிஸ்  ஆணைக்குழுவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவியதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment