UNP யிற்கு எதிராக முன்னணி, SLFP கூட்டத்தின் பின் நடவடிக்கை- சந்திம வீரக்கொடி

229 0

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர்,  ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடி ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான முன்னணி ஒன்றை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

அந்தக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதாக என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் அரசாங்கத்துடன் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பணிப்போர் உக்கிரமடைந்த நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment