எரிபொருள் விலை அதிகரிக்கும் – மாகாண சபை உறுப்பினர் எதிர்வு கூறல்

233 0

அரசாங்கம் விரைவில் எரிபொருளின் விலையை அதிகரிக்கவுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் எதிர்வு கூறியுள்ளார்.

இதற்கமைய பெட்ரோல் 20 ரூபாவாலும், டீசல் 9 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 40 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாகப் பிரமித்த பண்டார தென்னகோன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இலங்கை அரசும் இந்த விலை அதிகரிப்பு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் சகோதரமொழி ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Leave a comment