மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

290 0

மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்குடா – காளிகோயில் வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தாமோதரம் ஞானசுந்தரம் (வயது 43) என்பவரே உயிரிழந்தவராகும்.

இவர் தனது வீட்டிலிருந்த வேளை இவர் திடீரென மயக்கமுற்றுள்ளார். உடனடியாக அயலவர்கள் இவரை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதித்துள்ளனர்.

அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து இவர் பெற்றுவந்த கடனை மீளச்செலுத்த முடியாது மன விரக்தியுற்றிருந்ததாகவும் நஞ்சு அருந்தியிருக்கலாம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment