நச்சுத்தன்மையற்ற சேதனப்பசளை விவசாயத்தை மேம்படுத்த திட்டம்

210 0

நச்சுத்தன்மையற்ற சேதனப்பசளை விவசாயத்தை மேம்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை திருத்தத்திற்கு பின்னர் விவசாய அமைச்சு சமர்ப்பிக்கும் அமைச்சரவை ஆவணத்தில் சேதன பசளை விவசாயத்தை ஊக்குவிப்பதனை இலக்காகக் கொண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்பொழுது இலங்கையில் சேதனப்பசளை விவசாயத்தின் கீழ் 3801 விவசாயிகள் நெல் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சேதனப்பசளை விவசாயத்தின் கீழ் உற்பத்திசெய்யப்படும் நெற்காணிகள் 4955 ஹெக்டர் ஆகும். பாராம்பரிய உள்ளுர் நெல் வகைகள் பலவற்றை விவசாயிகள் உற்பத்திசெய்வதுடன் இந்த அரிசிக்கு உள்ளுர் சந்தையில் ஆகக்கூடுதலான கோரிக்கை உண்டு. இந்த விவாசயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அமைச்சரவை ஆவணம் சமர்ப்பிக்கப்படுவதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Leave a comment