கட்டுநாயக்க விமான நிலைய கட்டட தொகுதி ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ பரவல் காரணமாக விமான போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய தீயணைப்பு பிரிவு மற்றும் விமான படை தீயணைப்பு பிரிவு இணைந்து தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

