மஹிந்த ராஜபக்ஷ மிகப்பெரிய திருடன்-சந்திரிகா

363 0

கடந்த ஆட்சிக்காலத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகளை தன்னகத்தே வைத்திருந்த மஹிந்த ராஜபக்ஷவே மிகப்பெரிய திருடன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் சந்திரிகா குமாரதுங்கவின் முன்னாள் செயலாளர் திஸ்ஸநாயக்க இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து அவரிடம் ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

தான் ஒருபோதும் அதிகாரிகளுக்கு திருடுங்கள் என கூறுவதில்லை. அவர்கள் செய்யும் ஊழல்கள் தொடர்பில் என்னால் ஒன்றும் செய்யமுடியாது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போல கொலைசெய்யவோ கொள்ளையடிக்கவோ இல்லையென சந்திரிகா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment