இன்று இரவு வானிலையில் ஏற்பட போகும் திடீர் மாற்றம்

404 0

நாட்டில் இன்று இரவு மத்திய, வடமேல், கிழக்கு, சப்ரகமுவ, மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யகூடும் என்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காலநிலை அவதான நிலையம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

Leave a comment