கணவன் – மனைவி சடலமாக மீட்பு : மரணத்தில் பொலிஸார் சந்தேகம் : விசாரணைகள் தீவிரம்

310 0

குருநாகலை – ரிதிகம, கிரிபத்கல்ல பகுதி வீடொன்றிலிருந்து பொலிஸாரால் இன்று தம்பதிகள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டுள்ள தம்பதிகளது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்கள் 34 மற்றும் 29 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக தெரிவித்த பொலிஸார் பல கோணங்களிலும் தங்களது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment