மே தின நிகழ்வுகளுக்கு 1500 இ.போ.ச. பஸ்கள்

280 0

அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கேற்ப மே தின நிகழ்வுகளுக்கு செல்வதற்கு 1500 இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்களை வழங்கவுள்ளதாக இலங்கை மத்திய போக்குவரத்து சபையின் பிரதி நிறைவேற்று அதிகாரி பீ.எச்.ஆர். சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்த பஸ் வண்டிகளைப் பெற்றுக் கொள்ளத் தேவையான முழுக் கட்டணத்தையும் பஸ்களைப் பெற்றுக் கொள்ளும் கட்சிகள் செலுத்தியதன் பின்னர் பஸ்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட டிப்போக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment