மினுவாங்கொடயில் கோர விபத்து!! இளைஞன் ஸ்தலத்தில் பலி!

289 0

மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது நண்பருடன் வெசாக் பார்க்க செல்வதற்காக மோட்டார் சைக்கிள் பரிசோதிக்கும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதற்காக அதிக வேகமாக ஓட்டிய சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்த நிலையில் அவரது நண்பர் படுகாயமடைந்த நிலையில் மினுவங்கொட மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மினுவாங்கொட சந்தியில் உள்ள மின்சார தூணில் தலை மோதுண்டமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த இளைஞனின் தாயார் மகன் உயிரிழந்த இடத்தில் அழுது புலம்பும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.உயிரிழந்த இளைஞனின் இறுதி நிகழ்வில் மோட்டர் சைக்கிள் அணி வகுப்பு மூலம் சடலம் மாயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Leave a comment