கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

239 0

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் வீடு ஒன்றில் விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்களை இன்று காலை 10 மணியளவில் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே சோதனை மேற்கொண்ட பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தலவாக்கலை, ஒலிரூட் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் நீண்ட காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் ஒருவர் விற்பனை செய்பவர் என்றும், ஏனைய இருவரும் வாங்க சென்றவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜப்படுத்தப்படவுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment