மினுவங்கொடையில் முச்சக்கர வண்டி விபத்து – இருவர் பலி

314 0

மினுவங்கொடை, தெவலபல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாதையை கடக்க முற்பட்ட இருவர் மீது மோதிய முச்சக்கர வண்டியொன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் வந்த பேருந்து ஒன்றுடனும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான முச்சக்கர வண்டி ஓட்டுனர் மற்றும் பாதசாரிகள் இருவரையும் மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாதசாரிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

தெவலபல, பேரலந்த மற்றும் கனிஹிமுல்ல பகுதிகளை சேர்ந்த 47 மற்றும் 58 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஓட்டுனர் மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மினுவங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment