முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவா் உயிரிழப்பு!

263 0

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா்.

புனர்வாழ்வு பெற்ற குறித்த முன்னாள் போராளி புற்றுநோயினால் பாதிக்கப்பட்ருந்த நிலையில் அவர் நேற்றையதினம் (29-04-2018) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப்பபுலிகள் இயக்கத்தில் விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் பணியாற்றிய குறித்த போராளி இறுதியுத்தத்தின் பின்னா் புனர்வாழ்வு பெற்ற நிலையில் சுயதொழில் ஒன்றில் ஈடுபட்டிந்தார்.

அண்மைய நாட்களில் கடுமையான நோய் பாதிப்பிற்கு உள்ளான அவர் தனது நோயினை குணப்படுத்துவதற்கு உதவி கோரி பல்வேறு தரப்பினரிடம் கேரிக்கை விடுத்துவந்துள்ளாா்.

இவரது குடும்பம் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் நிலையில் எதிர்பாராமல் அவா் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோா் தெரிவித்துள்ளனா்.

இதேவேளை புனா்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்பபடுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் பலா் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உயிரிழந்தமை கடந்தகாலங்களில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment