ரணில்-மைத்திரி கூட்டரசாங்கத்தின் 4 ஆவது அமைச்சரவை சீர்திருத்தம் நாளை

208 0

ரணில் – மைத்திரி கூட்டரசாங்கத்தின் நான்காவது அமைச்சரவை மறுசீரமைப்பும் சத்தியப்பிரமாணமும் நாளை (01) இடம்பெறும் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அறிவியல் ரீதியாக அமைச்சுக்களுக்குரிய விடயங்கள் பிரிக்கப்பட்டு புதிய அமைச்சரவையின் அறிக்கை இன்று (30) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அண்மையில் அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ ல.சு.க.யின் 16 பேரின் அமைச்சுக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் கூறியுள்ளன.

புதிய அமைச்சுக்களைப் பெறவுள்ள அமைச்சர்களுக்கு அழைப்பிதழ்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன

Leave a comment