ஜெயலலிதா மரண விசாரணை: சசிகலா உதவியாளர்-முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் ஆஜர்

244 0

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தமிழக அரசின் முன்னாள் சிறப்பு செயலாளர் சாந்தா ஷீலா நாயர் மற்றும் முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் ஆஜர் ஆனார்கள்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

விசாரணை ஆணையத்தின் முன்பு இன்று சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன், சீருடை பணியாளர் தேர்வாணைய குழு தலைவர் திரிபாதி, ஏடி.ஜி.பி.அம்ரேஷ் புஜாரி, தாமரைக் கண்ணன், டிரைவர் கண்ணன் ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.

சாந்தஷீலா நாயர் திட்டக்கமி‌ஷன் தலைவர் உள்பட பல உயர் பதவிகளை வகித்தவர். ஓய்வு பெற்றதும் ஜெயலலிதா அவரை முதல்வர் அலுவலக தனிப்பிரிவு அதிகாரியாக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment