தொடர்ந்தும் மழை பெய்து வரும் காரணத்தால் நாவலபிட்டிய நகரில் பல வீதிகளில் நீர் நிரப்பியுள்ளதால் பிரதான வீதியின் போக்குரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
நாவலபிட்டி அஞ்சல் அலுவலகத்தில் இருந்து பொலிஸ் நிலையம் வரையான பகுதி இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
சில இடங்களில் சுமார் 2 அடி உயரத்திற்கு நீர் நிரப்பியுள்ளதால் பிரதான வீதியின் போக்குரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாவலபிட்டிய நகரில் மழை நீர் வடிந்தோடுவதற்கான வடிகாலமைப்பில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

