தமிழ் அரசியல் கைதிகள் என்ற பதத்தை ஸ்ரீலங்கா அரச தலைவர் பயன்படுத்தாவிடினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் விடுதலை செய்வதற்கு அவர் தங்களிடம் விருப்பம் வெளியிட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு தடையாக இருப்பதாக கூறும் காரணிகளை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ள சுமந்திரன் ஆனால் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றைய தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராசசிங்கமுடன் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

