படையினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் மக்கள் செல்ல கூடாது – சுரேஸ் வலியுறுத்தல்

198 0

நாட்டில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும், இரணைதீவு மக்கள் அவர்களது சொந்த காணிகளில் மீள் குடியேற்றப்படவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் சாடியுள்ளார்.

எனினும், எதிர்காலத்தில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் இரணைதீவு மக்கள் தமது சொந்த காணிகளில் இருந்து வெளியேற கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் யுத்தம் இடம்பெற்ற போது, இலங்கை படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு கோரி வட மாகாணத்தில்  போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் கிளிநொச்சி – இரணைதீவில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் தீர்வின்றி தொடர்கின்றது.

எனினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இணைதீவு மக்கள் கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை இரணைத்தீவுக்கு சென்று அங் தங்கியிருந்து ஐந்தாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமசந்திரன் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இரணைதீவிற்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

 

Leave a comment