உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
உடவளவை நீர்த்தேக்க பிரதேசத்தில் தற்பொழுது கடும் மழை பெய்துவருகின்றது. இதனை தொடர்ந்து நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவருகின்றுது.
தற்பொழுது நீர்த்தேக்க அதிகரிப்பு தொடர்பாக மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டு பொறியியலாளர் சுஜீவ குணசேகர தெரிவிக்கையில், வான் கதவு திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
மேற்படி நீரை வளவ கங்கைக்கு திருப்பவேண்டி ஏற்பட்டது. இதனால் நதியை அண்டியுள்ள பகுதியிலுள்ளோர் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.