எரி­பொருள் விலை அதி­க­ரிக்கும் சாத்­தியம்.!

368 0

பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் தொடர்ந்தும் நட்­டத்தை எதிர்­கொள்ளும் கூட்­டுத்­தா­ப­ன­மாக  காணப்­ப­டு­கின்­றது.  லங்கா ஐ.ஓ.சி. நிறு­வனம் விலை மாற்­றத்தின் கார­ண­மாக நாளொன்­றுக்கு 38 மில்­லியன் ரூபா நட்­ட­ம­டை­கின்­றது.  இதன் கார­ண­மாக அடுத்த மாதத்தில் எரி­பொருள் விலையை அதி­க­ரிப்­பது தொடர்பில் நிதி­ய­மைச்சு  இன்­றைய   அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பத்­தி­ரத்தை சமர்ப்­பிக்­க­வுள்­ளது என   பெற்­றோ­லிய சங்­கத்தின் தலைவர் ஆனந்த பாலித தெரி­வித்தார். உலக சந்­தையில் ஏற்­பட்ட  எரி­பொருள்  விலை மாற்­றத்தின் கார­ண­மாக இந்த தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. அடுத்த வரு­டத்­துக்குள் கனி­ய­வள பெற்­றோ­லிய  கூட்­டுத்­தா­ப­னத்­தை இலா­ப­ம­டையக்கூடிய கூட்­டுத்­தா­ப­ன­மாக மாற்­றி­ய­மைக்க வேண்டும்   என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில், பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் 2.3 பில்­லியன் ரூபா­வை மக்கள் வங்­கிக் கும், இலங்கை வங்­கிக்கும்  அடுத்த வருட காலத்­துக்குள் மீள் செலுத்த வேண்­டிய கட்­டாய சூழல் காணப்­ப­டு­கின்­றது. கூட்­டுத்­தா­ப­னத்தின் மேம்­பாட்­டுக்­காக அர­சாங்­கத்­தினால் ஒதுக்­கப்­பட்ட 315 பில்­லியன் ரூபா இது­வரை கால­மும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை.

மின்­சார சபை­யா­னது கடந்த வரு­டத்தில் மாத்­திரம் 50பில்­லியன் ரூபா நஷ்­டத்தை அடைந்­துள்ள சபை­யாக காணப்­ப­டு­கின்­றது. 53பில்­லியன் ரூபாவை கனி­ய­வள கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு இலங்கை மின்­சார சபை மீள் செலுத்த வேண்டும். அத்­து டன் தனியார் மின்­சார சபை 12பில்­லியன் கடனை மீள் செலுத்த  வேண்டும். ஆனால் இந்த நிதி  இது­வரை காலமும் மீளக் கிடைக்­கப்­பெ­ற­வில்லை.

தற்­போது அம்­பாந்­தோட்டை துறை­முகம் மற்றும் கொழும்பு துறை­மு­கத்தில் எரி­பொருள் பாவ­னை­க­ளுக்கு குறைவான அள­விலே கட்­ட­ணங்கள் அற­வி­டப்­ப­டுகின்­றன என்றார்

Leave a comment