வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் நாளை 23ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் சுமார் 44 தினங்கள் நடைபெற்றது. இதன் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து அண்மையில் இவ் ஊழியர்களின் போராட்டம் நிறைவுக்கு வந்ததை அடுத்து கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடத்தில் பயிலும் அனைத்து மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

