மோட்டார் சைக்கிள் விபத்து – இராணுவ சிப்பாய், பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி

217 0

சிலாபம் – கொஸ்வத்த – மீகஹவெல சந்தியில் இரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இராணுவ சிப்பாய் ஒருவரும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் இருவரும் படு காயமடைந்து மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மீகஹவெல பிரதேசத்தினை சேர்நத 51 வயதுடையவர் என்பதுடன், இராணுவ சிப்பாய் சிலாபம் – கொஸ்வத்த பிரதேசத்தினை சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment