சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி: உண்ணாவிரதப் போராட்டம்

219 0

சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்  மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் இன்று  இடம்பெற்றது.

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியால், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் இந்த அடையாள உண்ணாவிரம் இடம்பெற்றது.

அன்னை பூபதியின் நினைவு தினமான இன்றைய தினத்தில் தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி, இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி மனோகரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சுசிகலா அருள்தாஸ் உள்ளிட்டோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment