தியாக தீபம் அன்னை பூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு

224 0

தியா தீபம் அன்னையின் பூபதியின் 30ஆவது ஆண்டு நினைவு இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. தியாக தீபம் அன்னை பூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில் சமாதிக்கு அருகில் பொலிஸார் தமது பாதணிகளுடன் கடமையில் ஈடுபட்ட நிலையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களை அங்கிருந்துவெளியேற்றினார்.அன்னை பூபதியின் இந்த சமாதியென்பது எம்மை பொறுத்தவரையில் புனித இடமாக கருதுகின்றோம். எனவே தயவுசெய்து உங்களது பாதணிகளை வெளியே அகற்றுங்கள் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பொலிஸாரிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment