“அக்ஷய திரிதியை” நகைக்கடைகளில் மக்கள் கூட்டம்

244 0

அக்ஷய திரிதியையான இன்று ஹட்டன் நகர் முழுவதும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டதாக எமது  செய்தியாளர் தெரிவித்தார்.

சித்திரை வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை ‘அக்ஷய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. ‘அக்ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக, தங்கம், வெள்ளி அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதரவிலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

அக்ஷய திருதியையான இன்று ஹட்டன் நகரில் பெரும்பாலான இடங்களில் அதிகாலையிலேயே நகைக்கடைகள் திறக்கப்பட்டன. அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a comment