ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி 3 இலட்சம் கையொப்பங்கள் அனுப்பிவைப்பு!

283 0

அரசியல் கைதியாகிய ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனற்கு 3 இலட்சம் கையொப்பங்களைடன் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் மகஜர் ஒன்றை இன்றைய தினம் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஊடாக அனுப்பி வைத்துள்ளது.

இது தொடர்பில் தமழர் அசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா புவனேஸ்வரன் தெரிவிக்கையில்;

ஆயுள் தண்டனைக்கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆனந்தசுதாகரனின் இரண்டு குழந்தைகளும் தாயை இழந்து அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாடசாலை செல்கின்ற குழந்தைகளாக இருப்பதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளகியுள்ளது.

ஆகையால் அந்த குழந்தைகளின் வாழ்கையை கருத்திற் கொண்டு ஆனந்தசுதாகரனை உடனடியாக விடுதலை செய்யுமாறு வடபுலத்து கல்விச்சமூகம் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம். ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி வடக்குமாகாண அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இட்ட 3 இலட்சம் கையொப்பங்களும் இத்துடன் வழங்குகின்றோம்.என்றார்.

Leave a comment