துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரணதண்டனை

385 0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2011ஆம் ஆண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட வழக்கிலேயே துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முதலாவது, மூன்றாவது, ஏழாவது, பத்தாவது மற்றும் பதினோராவது சந்தேகநபர்கள் குற்றவாளிகளாக காணப்பட்ட நிலையிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை உத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக துமிந்த சில்வாவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

marana-thumintha-1 marana-thumintha-2 marana-thumintha-3 marana-thumintha-4 marana-thumintha-5