புத்தாண்டு விபத்துக்கள் இம்முறை 6 வீதத்தால் அதிகரிப்பு

360 0

கடந்த 24 மணி நேர காலப் பகுதியில் வாகன விபத்துக்கள் உட்பட 200 இற்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துப் பிரிவின் தேசிய தாதியர் பயிற்சி வழங்கும் பிரிவு அதிகாரி புஷ்பா ரம்யானி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இதன் அளவு 6 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட்டாசு விபத்தில் இம்முறை எவரும் காயமடைந்ததாக பதிவாகவில்லையெனவும், பெருந்தெருக்களில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கையே அதிகரித்துள்ளதாகவும் புஷ்பா ரம்யானி மேலும் கூறியுள்ளார்.

Leave a comment