அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை

223 0

பாராளுமன்ற கூட்டத்தொடர் விசேட வர்த்தமானி மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதனால் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவந்து, புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் காலப்பகுதியில், பாராளுமன்றத்தில் எந்தவித ஆவணமும் சமர்ப்பிப்பதற்கு இல்லை.

இதேவேளை, அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைத்ததன் மூலம் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எந்தவித தாக்கமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

Leave a comment