யாழில் இருந்து கொண்டுவரப்பட்ட கள்ளநோட்டுக்கள் வவுனியாவில் சிக்கின

216 0

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பயணி ஒருவரிடமிருந்து இருந்து பெருந்தொகையான கள்ளநோட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை 07.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பயணியிடம் இருந்து 1000 ரூபா நோட்டுக்கள் 45  மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் 35 வயதான அலவ்வ பிரதேசத்தை சேர்ந்த பிரியந்த சமரசேகர எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் போலி பணம் அச்சிடும் மோசடியாளர்களிடம் இருந்து இந்த சந்தேக நபர் பணம் பெற்றுச் செல்வதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

அதற்கமைய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக  விசாரணைகளின் பின்னர்  நீதிமன்றில்  முன்நிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

Leave a comment