பிரதேச சபை பெண் உறுப்பினர்களிடம் பாலியல் லஞ்சம் கோரும் நிலை- ரங்கே பண்டார

205 0

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற பெண் உறுப்பினர்களிடம் பாலியல் லஞ்சம் கேட்கும் நிலைமை உருவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தற்பொழுது பெண் உறுப்பினர்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. பாரிய வேலையொன்றுள்ளதாகவும், தாம் சந்திப்போமா என பிரதேச சபை  பெண் உறுப்பினர்களுக்கு தொலைபேசி அழைப்பு வருகின்றது. பெண் உறுப்பினர் வீட்டில் இருப்பதாயின், அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னைச் சந்திக்குமாறு சம்பந்தப்பட்ட நபர் தெரிவிக்கின்றார்.

இது தற்பொழுது பெண் உறுப்பினர்களிடம் கோரும் பாலியல் லஞ்சமாக மாறியுள்ளது. நாடு தற்பொழுது கூத்து நாடக மேடையாக மாறியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment