சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கைப் ரயில்வே திணைக்களமானது 12 விசேட ரயில்களை சேவைகளை ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய, இன்றிலிருந்து குறித்த ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்புக் கோட்டையிலிருந்து, காலை 7.20 மணிக்கு பண்டாரவளை வரை குளிரூட்டப்பட்ட ரயில்கள் சேவை ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து காலிக்கு இன்று காலை 6.50 இற்கும், கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு காலை 10 மணிக்கும் இவ்வாறு விசேட ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.