அரசாங்கத்தில் இருப்பதா? இல்லையா? – ஸ்ரீ ல.சு.க.யின் மத்திய செயற்குழு இன்று தீர்மானம்

290 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருப்பதா? இல்லையா ? என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் ஸ்ரீ ல.சு.க.யின் மத்திய செயற்குழுவின் முக்கிய கூட்டம் இன்று (11) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்த 16 ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் ஸ்ரீ ல.சு.க.யின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பொறுப்பளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  இதன்படியே இன்றைய கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி பொறுப்பளிக்கப்பட்ட அமைச்சர்கள் இருவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது சபைக்கு சமூகமளிக்காதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment