கம்பளை – தொழுவ வீதியின் துன்தெனிய சந்தியில் உள்ள கால்வாய் ஒன்றில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
கம்பளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு கால்வாய் ஒன்றில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்த மூவரையும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
82, 74 மற்றும் 72 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வரகாபொல, மெதிரிகிரிய மற்றும் கம்பளை பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்