வாக்களித்த 16 பேரும் கூட்டு எதிர்க் கட்சிக்கு வரவேண்டாம் – வாசுதேவ

265 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 16 பேரும் தனது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகக் கூடாது எனவும், அவர்கள் அவ்வாறே அமைச்சரவையில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கூட்டு எதிர்க் கட்சி சார்பு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் கூட்டு எதிர்க் கட்சியின் பக்கம் வருவதாயின் அவர்களை இரு கரம் கூட்டி வரவேற்கின்றோம். இருப்பினும், அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறாமல் இருந்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவதே சிறந்தது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment