கரைச்சி பிரதேச சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம்

311 0

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்வசப்படுத்தியுள்ளது.

இன்று காலை நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட அருணாச்சலம் வேழமாலிகிதன் 19 வாக்குகளுடன் தலைவராக தெரிவாகியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

சின்னையா தவபாலன் உப தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன நடுநிலைமை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment